/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2026 05:27 AM
திருவள்ளூர்: கலெக்டர் அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும் அங்கன்வாடி ஊழியர்கள் பதவி உயர்வு, கோடை விடுமுறை உட்பட பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், 10 நாட்களாக சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, 50க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக அரசு நேற்று மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு, 5,000 ரூபாய் விடுவித்ததாக கூறி, தங்களை அரசு புறக்கணிக்கிறது என, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

