/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக ரேவதி, கடந்த வாரம் பொறுப்பேற்று கொண்டார். இவர் நேற்று, ஒரு அங்கன்வாடி ஊழியரிடம் 'பணி நேரத்தில், மருத்துவமனைக்கு செல்லும் போது, ஏன் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை' என கண்டித்துள்ளார்.
நேற்று மாலை 6:00 மணிக்கு, திருத்தணி தாசில்தார் அலுவலகம் முன், 30க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், திட்ட அலுவலரின் செயலை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். பின், 'திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனு அளித்தனர்.

