/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவன் கொலை வழக்கில் இன்னொருவர் கைது
/
மாணவன் கொலை வழக்கில் இன்னொருவர் கைது
ADDED : ஜன 02, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.ஜி.ஆர்., நகர்: சென்னை எம்.ஜி.ஆர்., நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அஜய், 17, போதை மாத்திரை விற்பனை தகராறில், கடந்த 26ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த டேவிட், 28 என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சரவணன், 28 என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

