/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கு டி.எஸ்.பி. அறிவுரை
/
போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கு டி.எஸ்.பி. அறிவுரை
போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கு டி.எஸ்.பி. அறிவுரை
போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கு டி.எஸ்.பி. அறிவுரை
ADDED : ஜன 12, 2024 09:51 PM

திருத்தணி:திருத்தணி அடுத்த மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
ஆசிரியர் பரந்தாமன் வரவேற்றார். இதில் திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் பங்கேற்று பேசியதாவது:
மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானால், அவர்களது எதிர்காலம் வீணாகி விடும். மாணவர்கள் ஓழுக்கத்துடன் கல்வியை கற்றால் தான் உயர்ந்த பதவிகளை பெற முடியும். கல்வி தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும்.
போதை பொருட்கள் விற்பது குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிந்தால் ஆசிரியர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல்வி கற்பதற்காக பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்கள் பேருந்துகளில் தொங்கியபடியும், ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதை மாணவர்கள் தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும். ரயில் தண்டவாளத்தில் மாணவர்கள் நடந்து செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய செஞ்சிலுவை சங்கம், பொன்னேரி வட்ட கிளை சார்பில், ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சங்க செயலர் சித்ரா தலைமையில் நடந்த பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியர் ஏகாம்பரம் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், 100 பேர் பேரணியில் பங்கேற்றனர்.