/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எம்.எல்.ஏ.,விடம் சாலைப்பணி குறித்து முறையீடு
/
எம்.எல்.ஏ.,விடம் சாலைப்பணி குறித்து முறையீடு
ADDED : செப் 25, 2024 07:13 AM
ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் உள்ளது எட்டிக்குளம் பகுதி. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியதால், ஒரு வழிச்சாலையாக உள்ளது. குண்டும், குழியுமாக இருந்த சாலையில் நடக்க, டூ - வீலர்களில் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
இப்பகுதியில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி பொது நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆறு மாதத்திற்கு முன் துவங்கிய சிமென்ட் சாலைப் பணி பாதி முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது.
நேற்று ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழாவிற்கு வந்த கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.