/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
/
தேர்வு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
ADDED : பிப் 05, 2024 11:21 PM
காஞ்சிபுரம்: தமிழகம் முழுதும், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வு மையங்களை கண்காணிக்கவும், வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தேர்வு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா, செங்கல்பட்டு மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்க திட்ட இயக்குனர் ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக பள்ளி கல்வி இயக்க இயக்குனர் அறிவொளி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், வினாத்தாள் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் உள்ளிட்ட தேர்வு தொடர்பான கண்காணிப்பு பணிகள் குறித்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவர் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.