sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஊத்துக்கோட்டையில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

/

 ஊத்துக்கோட்டையில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

 ஊத்துக்கோட்டையில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு

 ஊத்துக்கோட்டையில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு


ADDED : நவ 19, 2025 05:24 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சிப்காட் பகுதியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வு மாணவர்களான சரண்ராஜ், மதியழகன், ஊத்துக்கோட்டை ராஜேஷ் ஆகியோர், பழமையான பலகை சிற்பம் உள்ளதை கண்டறிந்தனர்.

தொல்லியல் ஆய்வாளர் சங்க தலைவர் மணியன் கலியமூர்த்தி, கள ஆய்வு செய்தபோது, வேப்ப மரத்தடியில் 3 அடி அகலம், 2 அடி உயரத்தில் பலகைக் கல்லால் ஆன சிற்பம் இருப்பதை அறிந்தனர். அதில், ஒரு வீரன் தன் இடது கையில் தன் குடுமியை பிடித்துக்கொண்டு, வலது கையில் உள்ள வாளால் அரிவது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளதை கண்டறிந்தனர்.

அந்த வீரனின் கைகளில் சாதாரண காப்பு, வேலைபாடு இல்லாத கழுத்தணி இருந்தது. அதன் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது.

இதுகுறித்து, மணியன் கலியமூர்த்தி கூறிய தாவது:

இந்த சிற்பம், 11- 12ம் நுாற்றாண்டு, சோழர் காலத்தை சேர்ந்ததாக உள்ளது. இதில் உள்ள வீரர், தன்பலி எனும் அரிகண்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, மன்னன் அல்லது தலைவன் போரில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவோ, ஊர் வளம் பெற வேண்டும் என்பதற்காகவோ, கொற்றவையின் முன் தன் தலையை வெட்டி பலியிடுவார் .

இவ்வாறான செயலில் ஈடுபடுவோரின் குடும்பத்துக்கு, ஊர் சபையினர், உதிரக்காணி என்ற பெயரில் நிலங்களை தானமாக வழங்குவர். இந்த சிற்பத்தை, உள்ளூர் மக்கள், எல்லைக் கல் கருப்புசாமியாக வணங்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us