/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்
/
பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்
ADDED : நவ 05, 2025 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: ஊரக வளர்ச்சி துறையில் பழுதான வாகனங்கள், வரும் 10ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி உதவி இயக்கு நருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்கள், பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இந்த வாகனங்கள், வரும் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளன.
மேலும் விபரங்களுக்கு, ஊராட்சி உதவி இயக்கு நரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

