நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:தணிக்கை வார விழாவை முன்னிட்டு அரசு ஊழியர், உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு தணிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திய தணிக்கை துறை சார்பில் ஆண்டுதோறும் தணிக்கை வார விழா நடத்தப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பிரதிநிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடந்தது.
சென்னை முதுநிலை கணக்காய்வு தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்து, தணிக்கையின் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், முதுநிலை துணை கணக்காய்வு தலைவர்கள் சாந்த்ரா சத்தீஸ், சாரதா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

