/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்சி பொருளாக தானியங்கி சிக்னல்
/
காட்சி பொருளாக தானியங்கி சிக்னல்
ADDED : ஜன 03, 2025 02:07 AM

ஊத்துக்கோட்டை:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம், கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன.
சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியே பயணிக்கின்றன.
தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கு இந்த சாலை, எப்போது போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. ஊத்துக்கோட்டை வழியே பயணிக்கும் வாகனங்கள், அங்குள்ள பஜார் வழியே செல்கின்றன.
மேலும், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம், சத்தியவேடு, வரதயபாளையம், தடா, சூளூர்பேட்டை, காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த இப்பகுதியில் உள்ள நான்கு முனை சந்திக்கும் இடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், அமைத்த நாள் முதல் இதுவரை இயக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.
இதேபோல, பெரியபாளையம், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னலும் பெயரவிற்கு நின்று கொண்டு இருக்கிறது.
எனவே, எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள தானியங்கி சிக்னல்களை இயக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.