sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போஸ்டர் ஒட்டுவதை தடுக்க சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு

/

போஸ்டர் ஒட்டுவதை தடுக்க சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு

போஸ்டர் ஒட்டுவதை தடுக்க சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு

போஸ்டர் ஒட்டுவதை தடுக்க சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு


ADDED : மார் 16, 2025 02:17 AM

Google News

ADDED : மார் 16, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, மகப்பேறு, குழந்தைகள் நலம், இதய நோய், எலும்பு முறிவு சிகிச்சை, கண், பல், அவசர சிகிச்சை என, பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

ஆண், பெண் நோயாளிகளுக்காக, உள்நோயாளிகள் பிரிவு, 500 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும், 3,000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனை, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், போக்குவரத்து அதிகம் உள்ள ஜே.என்.சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், மருத்துவமனை சுற்றுச்சுவரில், பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போஸ்டர் ஒட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் முற்றிலும் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

இதை தவிர்க்கும் வகையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை சுற்றுச்சுவரில், சுகாதார விழிப்புணர்வு வாசகம் அடங்கிய விளம்பரத்தை வரைந்து வருகிறது. எனவே, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இனியாவது, அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்குமாறு, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us