sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி

/

குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி

குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி

குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி


ADDED : நவ 09, 2025 03:55 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் அருகில் உள்ள குளத்தில் தவறி விழுந்து, நீரில் முழ்கி உயிரிழந்தது.

கும்மிடிப்பூண்டி அருகே பெரியசோழியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சேது, 32; கார் ஓட்டுநர். இரவது மனைவி சங்கீதா, 24. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தர்ஷிணி என்ற பெண் குழந்தை இருந்தது .

இவர்களின் வீடு, பெரியசோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாங்குளத்தின் அருகே அமைந்துள்ளது. நேற்று காலை, வீட்டருகே தர்ஷிணி விளையாடியபோது, குளத்தில் தவறி விழுந்து நீரில் முழ்கியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து பெற்றோர் தேடிய போது, தர்ஷிணி குளத்தில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையை மீட்ட பெற்றோர், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us