/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிங்கீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
/
சிங்கீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED : பிப் 12, 2026 05:46 AM

மப்பேடு: சிங்கீஸ்வரர் கோவிலில், மாசி சிவராத்திரி பிரம்மோத்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் உள்ள புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் கோவிலில், 17ம் ஆண்டு மாசி சிவராத்திரி பிரம்மோத்சவ திருவிழா, நேற்று காலை 10:10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் காலை விநாயகர் உத்சவம் நடந்தது. தினமும் காலை சந்திரசேகர் மற்றும் மாலை சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
வரும் 17ம் தேதி காலை 9:00 - 9:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுமென, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.

