/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : நவ 03, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:  பெரியகளக்காட்டூரில் பூட்டிய வீட்டை உடைத்து, 6,000 ரூபாய் திருடுபோனது.
திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 38. எலக்ட்ரீஷியன். நேற்று காலை வேலைக்கு சென்றார்.
பின், மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

