sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பஸ் டிரைவர், நடத்துனரை தாக்கிய இருவருக்கு காப்பு..

/

பஸ் டிரைவர், நடத்துனரை தாக்கிய இருவருக்கு காப்பு..

பஸ் டிரைவர், நடத்துனரை தாக்கிய இருவருக்கு காப்பு..

பஸ் டிரைவர், நடத்துனரை தாக்கிய இருவருக்கு காப்பு..


ADDED : அக் 01, 2024 07:31 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி வழியாக திருப்பதி நோக்கி நேற்று முன்தினம், இரவு, 9:30 மணிக்கு, தடம் எண்:212எச் என்ற அரசு பேருந்து புறப்பட்டது.

பேருந்தில் ஓட்டுனர் அன்பு, 42; நடத்துனர் அன்பரசு, 42, என்பவர் பணிபுரிந்துக் கொண்டிருந்தனர்.

அந்த பேருந்தில் திருத்தணி நகரைச் சேர்ந்த நான்கு பேர் பயணம் செய்தனர். அப்போது டிக்கெட் வாங்குவதில் நடத்துனருக்கும், நான்கு பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் தாக்கப்பட்டனர்.

இருவரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியதில், திருத்தணி செட்டி தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெகன் என்கிற லோகேஷ், 25, மதன், 25 மற்றும் அனுமந்தாபுரம் மோகன், 26, என, தெரிய வந்தது.

அதை தொடர்ந்து போலீசார் நேற்று, லோகேஷ், மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோகனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us