sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மாணவியரை காப்பாற்றி உயிர்விட்ட பஸ் டிரைவர்

/

 மாணவியரை காப்பாற்றி உயிர்விட்ட பஸ் டிரைவர்

 மாணவியரை காப்பாற்றி உயிர்விட்ட பஸ் டிரைவர்

 மாணவியரை காப்பாற்றி உயிர்விட்ட பஸ் டிரைவர்


ADDED : டிச 02, 2025 01:08 AM

Google News

ADDED : டிச 02, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்: ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் துடித்த டிரைவர், சமயோசிதமாக பஸ்சை நிறுத்தி உயிரிழந்தார். இதனால் மாணவியர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லுாரிக்கு செல்வதற்காக, கல்லுாரி பேருந்தில் நேற்று காலை, மாணவியர் பயணம் செய்தனர். ஆற்காடு அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த ரவி, 60, பஸ்சை ஓட்டினார். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் அருகே -வாலாஜா சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.

உடனே, சாலை ஓர பள்ளத்தில் இறக்கி பஸ்சை நிறுத்திய டிரைவர் ரவி, சம்பவ இடத்திலேயே இறந்தார். சமயோசிதமாக செயல்பட்டதால், பஸ்சில் பயணித்த 12 மாணவியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us