/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூரை இல்லாத பஸ் நிறுத்தம் பயணியர் அவதி
/
கூரை இல்லாத பஸ் நிறுத்தம் பயணியர் அவதி
ADDED : ஜன 27, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு, கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில், காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை, கடந்த 2013ம் ஆண்டு சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
அதன்பின், 2016ல் பணிகள் நிறைவடைந்தும், எட்டு ஆண்டுகளாகியும் இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவில்லை. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பயணியர் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்த ஊராட்சி நிர்வாகம் கூரை அமைக்கவில்லை.
இதனால், மப்பேடு கூட்டு சாலை பகுதியில், பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ -- மாணவியர், வெயில், மழையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

