/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர் மண்டிய குளம் துார்வாரப்படுமா?
/
புதர் மண்டிய குளம் துார்வாரப்படுமா?
ADDED : ஜூன் 29, 2023 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பொதட்டூர் பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில், பூங்காவை ஒட்டி, பொது குளம் உள்ளது.
பழமையான இந்த குளம் தற்போது நீரின்றி வறண்டு கிடக்கிறது. குளத்தில் புதர்கள் வளர்ந்துள்ளதால், குளம் இருக்கும் தடமே தெரியவில்லை.
பொதட்டூர்பேட்டையை சுற்றிலும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், இந்த பொதுகுளம் மட்டும் வறண்டு உள்ளது.
எனவே குளத்தை சீரமைத்து, வரத்து கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.