எம்.ஜி.ஆர்., போல் வேடமணிந்து வந்த வேட்பாளர் மனு தாக்கல்
எம்.ஜி.ஆர்., போல் வேடமணிந்து வந்த வேட்பாளர் மனு தாக்கல்
ADDED : ஏப் 04, 2026 10:42 PM

அ நிறம் | அளவு
திருத்தணி;திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 56. இவர், நேற்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., வேடமணிந்து வந்தார்.
பின், அவர் திருத்தணி சட்டசபை தொகுதியில் எம்.ஜி.ஆர்., மக்கள் கட்சி சார்பில், போட்டியிடுவதாக கூறி, தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின், 'திருத்தணி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவேன். எம்.ஜி.ஆர்., போல் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்வேன்' என விஸ்வநாதன் தெரிவித்தார்.
★★
