/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரிவாள் படத்துடன் பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
/
அரிவாள் படத்துடன் பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 20, 2025 02:00 AM

பென்னாகரம்:பென்னாகரம் அருகே, திருமண வரவேற்பு விழாவிற்கு, அரிவாள்கள் படத்துடன் பேனர் வைத்த, 6 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, தாசம்பட்டி பிரிவு சாலையிலுள்ள பெரியாண்டிச்சியம்மன் கோவில் அருகே, கடந்த, 16ல் நாயக்கனுாரைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் இருமத்துாரைச் சேர்ந்த லதா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடந்தது. இதற்காக, அவரது நண்பர்கள் சார்பில், சாலையோரம் பேனர் வைத்திருந்தனர். அதில், இருவரது கையில் அரிவாளுடன், 'வரவேற்கிறது நாங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்க' என்ற வாசகங்கள் இருந்தன.
மேலும், அனுமதியின்றியும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் பேனர் வைத்ததாக, நாயக்கனுாரைச் சேர்ந்த, முருகன், 23, பிரகாஷ், 28, அலெக்ஸ், 24, பிரகாஷ், 23, ஜீவா, 33 என, 6 பேர் மீது, பென்னாகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

