sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரவில் உலா வரும் கால்நடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

இரவில் உலா வரும் கால்நடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இரவில் உலா வரும் கால்நடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இரவில் உலா வரும் கால்நடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜன 27, 2024 11:22 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு,திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் -தக்கோலம் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும், 30,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.

திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து வேலைக்கு சென்னை, திருவள்ளூர் செல்வோர் அதிகம். அவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் இச்சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.

இங்கு சின்னகளக்காட்டூர் பகுதியில், இரவில் நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலை நடுவில் கும்பலாக படுத்து, திடீரென எழுந்து, சாலையின் குறுக்கே ஓடும். அப்போது, இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்திற்குள்ளாகின்றனர்.

நான்கு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், அவ்வப்போது, கால்நடைகளால், விபத்திற்குள்ளாகி, அவற்றில் பயணம் செய்வோர் காயமடைந்து விடுகின்றனர்.

எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை, பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us