தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெண் பக்தரிடம் செயின் பறிப்பு

 பெண் பக்தரிடம் செயின் பறிப்பு

 பெண் பக்தரிடம் செயின் பறிப்பு


ADDED : பிப் 12, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவரம்: கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பெண் பக்தரிடம், 4 சவரன் செயினை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி, 60. இவர், நேற்று அதே கிராமத்தில் உள்ள வரமுக்தீஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு சென்றார். கோவில் ராஜகோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றும்போது, சக பக்தர்களுடன் சுமதியும் மேல்நோக்கி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, சுமதியின் கழுத்தில் இருந்த, 4 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்தான், செயின் திருடு போனது தெரிந்தது. சோழவரம் காவல் நிலையத்தில் சுமதி அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us