sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்

/

திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்


ADDED : ஜன 11, 2024 11:14 PM

Google News

ADDED : ஜன 11, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் உள்ள எம்.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி, செயல் அலுவலர் வெங்கடேசன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி முன்னிலையில் பேரூராட்சிகள் இயக்குனர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் வடிவேல் வரவேற்றார்.

இதில் வருவாய், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட, 16 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில் இருந்து, 722 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் துறை வாரியாக பிரித்து வழங்கப்பட்டது.

இதேபோல் திருவள்ளூர் டி.ஆர்.எஸ். மஹாலில் நகராட்சி கமிஷனர் சுபாஷினி தலைமையில் நடந்த 'மக்களுடன் முதல்வர் ' முகாமில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி. ராஜேந்திரன் பங்கேற்று மனுக்களை பெற்றார். இந்த முகாமில் 194 மனுக்கள் பெறப்பட்டன. நான்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள மனு துறை வாரியாக பிரித்து வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us