sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

/

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்


ADDED : ஜன 11, 2025 08:02 PM

Google News

ADDED : ஜன 11, 2025 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுமாறு திருவள்ளூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் பண்டிகையாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள், போகி பண்டிகையாக, 'பழையன கழிதலும், புதியன புகுதலுமாக' கொண்டாடி வருவது வழக்கம்.

இந்நாளில், தமிழர்கள், தை திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பது வழக்கம்.

போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது. போகியன்று தங்களிடம் உள்ள டயர், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரித்து வருகின்றனர்.

இதனால், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கந்தக டைஆக்ஸைடு, டையாக்சின், மற்றும் நச்சுத் துகள்களால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன் வாயிலாக கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை, போகி திருநாளில், பழைய பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us