ADDED : செப் 03, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, செப். 4–
திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திஷ், 20. இவர், சென்னை மாநில கல்லுாரியில், பி.ஏ., பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஒரு மாதமாக, கல்லுாரிக்கு சரியாக போகாமல், நித்திஷ் வீட்டிலேயே இருந்தார். நேற்று முன்தினம் காலையில், அவரது பெற்றோர், இன்று முதல் கல்லுாரி செல்ல வேண்டும் என கூறிவிட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்றனர்.
மாலை 6:00 மணிக்கு, நித்திஷின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டு, நித்திஷ் தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
