sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு

/

!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு

!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு

!தேர்தலை கண்காணிக்க குழு நியமனம் பறக்கும் படை: பதற்ற ஓட்டுச்சாவடிகள் நேரடி கண்காணிப்பு


ADDED : மார் 17, 2024 11:01 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது:

லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனுக்கள், வரும் 20 - 27 வரை, கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அறையில், வேலை நாட்களில் காலை 11:00 - மாலை 3:00 மணி வரை பெறப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 281 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவை மற்றும் ஆறு ஓட்டுச் சாவடிகள், மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவு நாளன்று, இந்த ஓட்டுச் சாவடிகள், நேரடி ஒளிபரப்பு வாயிலாக, மாவட்ட, மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கு தேவையான பொருட்களை வழங்க, மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர் மற்றும் உதவியாளர் என, தலா மூன்று பேர் கொண்ட 306 மண்டல குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவிற்காக, 9,119 ஓட்டுப்பதிவு இயந்திரம், 4,821 கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை காட்டும் கருவி தயார் நிலையில் உள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதியை அமல்படுத்த, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள, 90 பறக்கும் படை, 90 நிலை கண்காணிப்பு குழு, 20 காணொளி கண்காணிப்பு குழு, 10 காணொளி பார்வையாளர் குழு மற்றும் வேட்பாளர் செலவினங்களை கண்காணிக்க, 10 உதவி செலவின பார்வையாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினருக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட, வாகன வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குழுவினரின் பணிகள், மாவட்ட மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறைகள் வாயிலாக, கண்காணிக்கப்படும்.

வேட்பாளர்கள், பொதுக்கூட்டம், ஊர்வலம் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றுக்கு அனுமதியை 48 மணி நேரத்திற்கு முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தின், http://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் ஆகியோர், இந்த இணையதளத்திலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் விதிமீறல் குறித்து பொதுமக்கள், 'C-Vigil' என்ற மொபைல் செயலி வாயிலாக புகார் அளிக்கலாம்.

புகாரின் விபரம், புகைப்படம், வீடியோ மற்றும் விதிமீறல் நடைபெறும் இடம் உடனடியாக, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வரும். மேற்படி புகார் சம்பந்தப்பட்ட தொகுதி பறக்கும் படை குழுவினருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இதை 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 87 பேர் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுப்பாட்டு அறை


திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகம் மற்றும் புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 044 - 27660641, 27660642, 27660643, 27660644 மற்றும் இலவச எண் 1800 425 8515 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம்.

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்!

கலெக்டர் பிரபுசங்கர் மேலும் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை அனைத்து அரசியல் கட்சியினரும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருப்பதால், அரசியல் கட்சியினர் விளம்பரங்கள், கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன், நான்கு பேர் மட்டுமே வர வேண்டும்.பொதுமக்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் பணத்திற்கு உரிய ஆதாரம் வைத்திருக்க வேண்டும். 100 சதவீதம் ஓட்டுப்பதிவை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. பொதுமக்கள் ஓட்டுக்காக பணம் வாங்காமல், நியாயமாக ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். லோக்சபா தேர்தல், நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



மக்கள் மனு இனி பெட்டியில்

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கலெக்டர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், கிராம பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களுக்கு அவசர கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலகம் வாசலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் இட்டு செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



திருவள்ளூர், மார்ச் 18-

''திருவள்ளூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை கண்காணிக்க, 90 பறக்கும் படை மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான, 287 ஓட்டுச் சாவடிகளில் நடைபெறும் ஓட்டுப்பதிவு, 'சிசிடிவி' வாயிலாக நேரடியாக கண்காணிக்கப்படும்,'' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us