sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிறுவனத்தில் ரூ.1.73 கோடி மோசடி: 'மாஜி' ஊழியர் கைது

/

நிறுவனத்தில் ரூ.1.73 கோடி மோசடி: 'மாஜி' ஊழியர் கைது

நிறுவனத்தில் ரூ.1.73 கோடி மோசடி: 'மாஜி' ஊழியர் கைது

நிறுவனத்தில் ரூ.1.73 கோடி மோசடி: 'மாஜி' ஊழியர் கைது


ADDED : டிச 26, 2024 03:19 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பெசன்ட் நகரில், ஸ்ரீ ராகவேந்திரா என்டர்பிரைசஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், மத்திய அரசு அலுவலக பராமரிப்பு பணிக்கு, ஆட்களை அனுப்புகிறது.

இதன் உரிமையாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அதன் விபரம்:

நிறுவனத்தில் கணக்காளராக சாந்தி என்பவர், 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அனைத்து பண பரிவர்த்தனைகளும் அவரே கவனித்தார்.

நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களுக்கு வெவ்வேறு பெயர்களில், 1.73 கோடி ரூபாய் அனுப்பி, நம்பிக்கை மோசடி செய்து பல இடங்களில் சொத்து வாங்கியுள்ளார்.

இந்த மோசடி, அவர் வேலையை விட்டு நின்ற பின்னரே தெரிந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு பதிவு செய்த மோசடி ஆவண தடுப்பு பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தேடப்பட்டு வரும் சாந்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அவரை கைது செய்தனர்.

நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்தோரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us