நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுப்பத்தில் பயணியர் நிழற்குடை வேண்டும்
மணவாள நகர் - திருவள்ளூர் செல்லும் வழியில் பெரியகுப்பம், ஆயில் மில் பகுதியில் தினமும் ஏராளமான மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
நிழற்குடை இல்லாததால், பொதுமக்களும், மாணவ - மாணவியரும் வெயில், மழையில் அவதிப்பட வேண்டி உள்ளது.
எனவே, இங்கு பயணியர் நிழற்குடை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சுந்தரேசன்,
திருவள்ளூர்.