sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுடுகாடில் மணல் திருட்டு சப்- கலெக்டரிடம் புகார்

/

சுடுகாடில் மணல் திருட்டு சப்- கலெக்டரிடம் புகார்

சுடுகாடில் மணல் திருட்டு சப்- கலெக்டரிடம் புகார்

சுடுகாடில் மணல் திருட்டு சப்- கலெக்டரிடம் புகார்


ADDED : அக் 25, 2024 08:46 PM

Google News

ADDED : அக் 25, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:பழவேற்காடு மீனவப்பகுதியில் உள்ள கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட சுடுகாடு பகுதியில் கடந்த சில தினங்களாக மணல் திருட்டு நடக்கிறது.

இது குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து உள்ளனர்.

புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கடந்த, 22ம் தேதி, ஆண்டிகுப்பத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரது இறுதி சடங்கிற்கு இரு கிராமத்தினரை சேர்ந்தவர்களும் சுடுகாடு பகுதிக்கு சென்றபோது, அங்கு மணல் திருடப்பட்டிருப்பதை கண்டோம்.

மேலும், அரிச்சந்திரன் மேடையும் தகர்க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றோம்.

சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்டதுடன், அரிச்சந்திரன் மேடையையும் தகர்த்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புகாரை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us