/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண் லாரிகளால் நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
/
மண் லாரிகளால் நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 10, 2024 01:46 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த விடையூர் ஏரியிலிருந்து அரசு உத்தரவுப்படி கடந்த சில தினங்களுக்கு முன் சவுடு மண் எடுக்கும் பணி துவங்கியது.
இங்கிருந்து எடுக்கப்படும் சவுடு மண் சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் 300க்கும் மேற்பட்ட லாரிகளில், விடையூர் ஏரியிலிருந்து கடம்பத்துார், திருப்பாச்சூர், திருவள்ளூர் வழியாக பல இடங்ளுக்கு சவுடு மண் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு செல்லும் லாரிகள், காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை திருவள்ளூர் - திருப்பாச்சூர் மற்றும் திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் இவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

