sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்

/

பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்

பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்

பழங்குடியினர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி துவக்கம்


ADDED : ஜூலை 14, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் பகுதியில், 16 பழங்குடியின குடும்பத்தினர் குடிசை வீடுகளில், மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

கடந்த வாரம் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், பழங்குடியினர் வசிக்கும் இடத்திற்கு சென்று, ஒரு நாள் முழுதும் முகாமிட்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இரு நாட்களில் ஏற்படுத்தி கொடுத்தார்.

நேற்று காலை 16 குடும்பத்தினருக்கும், அரசு சார்பில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டினார். நான்கு மாதத்திற்குள் வீடுகளை முழுமையாக கட்டி, பழங்குடியின மக்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us