sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளியில் பாதியில் நிறுத்தப்பட்ட சமையலறை கட்டடப்பணி

/

அரசு பள்ளியில் பாதியில் நிறுத்தப்பட்ட சமையலறை கட்டடப்பணி

அரசு பள்ளியில் பாதியில் நிறுத்தப்பட்ட சமையலறை கட்டடப்பணி

அரசு பள்ளியில் பாதியில் நிறுத்தப்பட்ட சமையலறை கட்டடப்பணி


ADDED : அக் 20, 2024 01:00 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் தும்பிகுளம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக பள்ளி வளாகத்திலேயே புதியதாக சமையலறை கட்டடம் ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பள்ளி உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ், 8.60 லட்சம் ரூபாயில் பள்ளி வளாகத்தில் புதிய சமையல் அறை கட்டடம் கட்டும் பணி துவங்கியது.

சமையல் அறை கட்டடத்திற்கு மேல்தளம்போட்ட நிலையில் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி மாணவர்களுக்கு, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் அறையில் சத்துணவு தயாரிகின்றனர். பின் அங்கிருந்து பெண் சமையலர் மற்றும் உதவியாளர் தயாரித்த சத்துணவை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரவேண்டியுள்ளது.

மழை காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு தயாரித்து கொண்டு வருவதில் சமையலர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதியில் நிறுத்தப்பட்ட சமையல் அறை கட்டடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us