ADDED : ஜன 26, 2025 10:02 PM
அ நிறம் | அளவு
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஏழுமலை, 31; கட்டுமான தொழிலாளி. கடந்த 24ம் தேதி வேலையில் ஈடுபட்டிருந்த போது, 10 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்.
இதில், பலத்த காயம் அடைந்தவர், வேலுார் அடுத்த, ரத்தினகிரி சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று, அவர் உயிரிழந்தார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
