/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கைரேகை பதிவாகவில்லை நுகர்வோர் கடும் அவஸ்தை
/
கைரேகை பதிவாகவில்லை நுகர்வோர் கடும் அவஸ்தை
ADDED : ஆக 18, 2025 11:41 PM
திருவாலங்காடு, விரல்ரேகை பதிவு நடைமுறையில் தொடரும் சிக்கலால், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் போது, அவர்களது விரல்ரேகை அல்லது கருவிழி பதிவு செய்யப்படுகிறது. ஆனால், சிலருக்கு விரல்ரேகை பதிவாகவில்லை.
திருத்தணி தாலுகாவில் உள்ள 74 கிராமங்களில், 137 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் வாயிலாக, 65,856 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
பொருட்கள் வாங்க செல்வோரின் ஆதார் பதிவு அடிப்படையிலான தரவுகளுடன் சரிபார்த்து, பி.ஓ.எஸ்., கருவி மூலம் விரல்ரேகை பதிவுகள் ஏற்கப்படுகின்றன.
கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெரும்பாலான முதியோரின் விரல்ரேகைகள் பதிவாகவில்லை.
விரல்ரேகை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.
சில நாட்களாக, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற பலருக்கு விரல்ரேகை பதிவாகவில்லை.
இதுகுறித்து திருவாலங்காடு கிராம மக்கள் கூறுகையில், 'பொருள் வாங்க 15 - 20 நிமிடம் வரை ஆகிறது. விரல்ரேகை பதிவாகவில்லை எனக் கூறுவதால், பொருட்கள் வாங்க முடியவில்லை' என்றனர்.
திருத்தணி சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், 'முறைகேடுகளை தடுக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் ஒருவரின் விரல்ரேகை பதிவு செய்தால் போதும்; பொருட்கள் வாங்கலாம்' என்றனர்.