ADDED : செப் 20, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக விவசாயிகள் இடுபொருள் பெறலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக விவசாயிகள் தேவையான இடு பொருட்கள் பெறும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள், சம்பா பருவத்திற்கு தேவையான விதை, உயிர் உரம், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்களை ஏ.டி.எம்., கார்டு, கூகுள்பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் வாயிலாக பெறுவதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே, இடுபொருட்களை வாங்க வேளாண் விரிவாக்க மையங்களுக்கு வரும் விவசாயிகள், முழு தொகை அல்லது பங்களிப்பு தொகையை மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம்.