ADDED : பிப் 10, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட அத்திமாஞ்சேரியை சேர்ந்தவர் சின்னபையன் மகன் சிலம்பரசன், 35. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவரது வீட்டில், சிலம்பரசன் உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் கிடந்தார்.
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.