sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி ஆற்று மேம்பாலத்தில் இரும்பு சட்டங்களில் விரிசல்

/

ஆரணி ஆற்று மேம்பாலத்தில் இரும்பு சட்டங்களில் விரிசல்

ஆரணி ஆற்று மேம்பாலத்தில் இரும்பு சட்டங்களில் விரிசல்

ஆரணி ஆற்று மேம்பாலத்தில் இரும்பு சட்டங்களில் விரிசல்


ADDED : ஜூலை 07, 2025 02:33 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலத்தில், இரும்பு சட்டங்கள் உள்ள இடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 2017ம் ஆண்டு 27.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாலம் கட்டும் பணி துவங்கி, 2021ம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த பாலம், 450 மீ., துாரம், 15 மீ., அகலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இதன் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்கின்றனர். தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

அதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம் சத்தியவேடு, காளஹஸ்தி, தடா, வரதயபாளையம் ஆகிய இடங்களுக்கு செல்ல இப்பாலத்தை கடந்து, ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் இரும்பு சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த பாலத்தில் இரும்பு சட்டம் உள்ள இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் நிலை உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us