/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டிட்வா' புயலால் பழவேற்காடில் பலத்த காற்று கடலோர கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம்
/
'டிட்வா' புயலால் பழவேற்காடில் பலத்த காற்று கடலோர கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம்
'டிட்வா' புயலால் பழவேற்காடில் பலத்த காற்று கடலோர கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம்
'டிட்வா' புயலால் பழவேற்காடில் பலத்த காற்று கடலோர கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : டிச 01, 2025 04:27 AM

பழவேற்காடு: வங்க கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயலால், பழவேற்காடில் பலத்த காற்று வீசுவதால், கடலோர கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வங்க கடலில், கடந்த 24ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, தற்போது 'டிட்வா' புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதி மீனவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை அறிவுறுத்தி உள்ளது.
'டிட்வா' புயல் காரணமாக, நேற்று பழவேற்காடு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் வழக்கத்தை விட கொந்தளிப்பாக உள்ளது. புயல் காற்று மற்றும் ராட்சத அலைகளில் படகு மற்றும் வலைகள் சேதமடைவதை தவிர்க்க, அவற்றை பாதுகாக்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக, ஒரு வாரமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். பழவேற்காடு கடற்கரைக்கு மிக அருகில் உள்ள கோரைகுப்பம் கிராமத்தில் கூடுதல் கண்காணிப்பு உள்ளது.
புயல் மழை அதிகரிக்கும் சூழலில், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அரசு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதுகாப்பு மையங்கள் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீன்வளம், வருவாய், காவல், கடலோர காவல் படை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினரும், மீனவ கிராமங்களில் முகாமிட்டு, கண்காணித்து வருகின்றனர்.

