/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆன்மிக பயண குழுவினர் திருத்தணியில் தரிசனம்
/
ஆன்மிக பயண குழுவினர் திருத்தணியில் தரிசனம்
ADDED : ஜன 29, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: தமிழக அரசு சார்பில் ஆறுபடை முருகன் கோவில்களுக்கு, மூத்த குடிமகன்களை இலவசமாக ஆன்மீக சுற்றுப் பயணம் அழைத்து செல்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில், ஆயிரம் பேரை அழைத்து செல்வதற்கும் ஹிந்து அறநிலைய துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 207 பக்தர்களை நேற்று சென்னை பாரிமுனையில் இருந்து நான்கு பேருந்துகளில் ஏற்றி வைத்து அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். மதியம், அந்த பக்தர்கள் திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு வந்தனர்.