/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செத்து மிதக்கும் மீன்கள் தாராட்சி கிராமத்தில் அதிர்ச்சி
/
செத்து மிதக்கும் மீன்கள் தாராட்சி கிராமத்தில் அதிர்ச்சி
செத்து மிதக்கும் மீன்கள் தாராட்சி கிராமத்தில் அதிர்ச்சி
செத்து மிதக்கும் மீன்கள் தாராட்சி கிராமத்தில் அதிர்ச்சி
ADDED : ஏப் 17, 2025 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரது மகன்வினோத், 37. தாராட்சி கிராமத்தில், தனக்கு சொந்தமான இடத்தில், நான்கு மாதங்களாக குட்டை அமைத்து மீன் வளர்த்து வருகிறார்.
இதில், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் குட்டிகளை வளர்த்து வந்தார்.
தற்போது, அவை பெரிதாக வளர்ந்து, விற்பனைக்கு தயாரான நிலையில், நேற்று முன்தினம் மாலை மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருந்தன.
இதுகுறித்து வினோத், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.