/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடைகள் ஒதுக்குவதில் தாமதம் கும்மிடி பேரூராட்சி அலட்சியம்
/
கடைகள் ஒதுக்குவதில் தாமதம் கும்மிடி பேரூராட்சி அலட்சியம்
கடைகள் ஒதுக்குவதில் தாமதம் கும்மிடி பேரூராட்சி அலட்சியம்
கடைகள் ஒதுக்குவதில் தாமதம் கும்மிடி பேரூராட்சி அலட்சியம்
ADDED : டிச 19, 2025 06:06 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் சாலையோர வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட கடைகளை, ஓராண்டாக பேரூராட்சி நிர்வாகம் ஒப்படைக்காததால், ஜி.என்.டி., சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், 'பீக்ஹவர்ஸ்' நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.
சாலையோர வியாபாரிகளுக்காக, பேருந்து நிலைய வளாகத்தில், 197 கடைகள் கட்டப்பட்டன. பணிகள் முடிந்து ஓராண்டாகியும், தற்போது வரை சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைக்கப்படவில்லை.
போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக கட்டப்பட்ட கடைகளை ஒப்படைப்பதில் பேரூராட்சி நிர்வாகம் தாமதித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, உடனே சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க, பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

