/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமற்ற விதை விற்பனை துணை இயக்குநர் எச்சரிக்கை
/
தரமற்ற விதை விற்பனை துணை இயக்குநர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 17, 2025 02:03 AM
திருவள்ளூர்:தரமற்ற விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் வானதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கடைகளின் ஆவணங்கள், விதை விற்பனை பதிவேடு மற்றும் விதைகளை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:
விதை விற்பனை நிலையங்களில் உள்ள, சேமிப்பு களத்தை சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
சான்று அனுமதி பெற்ற, நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மீறினால், விதைகள் சட்டம் 1966ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விதை உரிமம் மற்றும் விலை பட்டியல், விவசாயிகள் பார்வையில் தெரியுமாறு எழுதி வைக்க வேண்டும்.
விவசாயிகள் உரிமம்பெறாதவர்களிடம் இருந்து, விதைகளை வாங்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட, தரமான சான்று பெற்ற நெல்விதைகளை மட்டுமே விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

