sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் ரூ.4 கோடியில் வளர்ச்சி பணிகள்

/

திருத்தணியில் ரூ.4 கோடியில் வளர்ச்சி பணிகள்

திருத்தணியில் ரூ.4 கோடியில் வளர்ச்சி பணிகள்

திருத்தணியில் ரூ.4 கோடியில் வளர்ச்சி பணிகள்


ADDED : பிப் 01, 2025 09:46 PM

Google News

ADDED : பிப் 01, 2025 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 15வது மாநில நிதிக் குழு, 2025- - 26ம் ஆண்டு திட்டத்தின் வாயிலாக, புதியதாக தார்ச் சாலை, கழிவுநீர் கால்வாய், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுகாதார வளாகம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து, திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருத்தணி ஒன்றியத்தில், 15வது நிதிக்குழு வாயிலாக, ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, 4.33 கோடி ரூபாய் திட்ட மதிப்பு தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளோம்.

அதாவது ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை திட்ட மதிப்பு தயாரித்துள்ளோம்.

இதில், குறைந்த பட்சமாக பீரகுப்பம் ஊராட்சிக்கு, 5.80 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக மத்துார் ஊராட்சிக்கு, 24.50 லட்சம் ரூபாயும் திட்ட மதிப்பீடு அனுப்பி உள்ளோம்.

மாவட்ட நிர்வாகம் நிதியுதவி ஓதுக்கீடு செய்ததும், தேர்வு செய்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு. மூன்று மாதங்களில் மேற்கண்ட வளர்ச்சி பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us