sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்

/

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்


ADDED : அக் 07, 2024 02:26 AM

Google News

ADDED : அக் 07, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை 5:30 மணி முதலே, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழி தரிசனத்தில், 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தேர்வீதியில் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க காத்திருந்தனர்.

சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலர் காவடிகளுடன் நேர்த்திக்கடனை செலுத்தினர். பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக வந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மலைப்பாதை மற்றும் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us