/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 27, 2026 05:12 AM
திருத்தணி: நாட்டின் 77வது குடியரசு தினவிழாவையொட்டி விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதேபோல், 100 ரூபாய் கட்டண டிக்கெட் பெறுவதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மொட்டை அடித்து முருகனை வழிபட்டனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
போக்குவரத்து நெரிசலை தடுக்க ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. சில கார்கள் மட்டுமே மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டன.

