/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
/
முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
ADDED : அக் 19, 2025 10:18 PM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை என்பதால், மூலவரை தரிசிக்க மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பொது வழியில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உத்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதியுலா வந்தார்.