sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் சேவை அறிய 'டிஜிட்டல்' பலகை பொருத்தம்

/

ரயில் சேவை அறிய 'டிஜிட்டல்' பலகை பொருத்தம்

ரயில் சேவை அறிய 'டிஜிட்டல்' பலகை பொருத்தம்

ரயில் சேவை அறிய 'டிஜிட்டல்' பலகை பொருத்தம்


ADDED : பிப் 16, 2024 10:20 PM

Google News

ADDED : பிப் 16, 2024 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தடங்களில், தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை கோட்டத்தின் கீழ், உள்ள 160 ரயில் நிலையங்களில், பெரும்பாலும் புறநகர் ரயில் நிலையங்களாக இருக்கின்றன. ஆனால், ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.

குறிப்பாக, ரயில்களின் சேவை குறித்து, தெளிவாக கால அட்டவணை பலகை, பேனர்கள் இல்லாததால், பயணியர் குழப்பம் அடைவதாக, நவ., 17ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், மின்சார ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல்' தகவல் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பயணியருக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை, ரயில் நிலையங்களில் மேம்படுத்தி வருகிறோம். பழவந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

'மற்ற நிலையங்களுக்கும், டிஜிட்டல் பலகை வரும்' என்றார்.






      Dinamalar
      Follow us