/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுற்றுலா
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுற்றுலா
ADDED : மார் 05, 2024 06:33 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 40 மாற்றுத்திறனாளி மாணவர்கள் வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு ஒரு நாள் இன்ப சுற்றுலா சென்றனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் என 40 மாற்றுத்திறனாளிகள் ஒரு நாள் இன்ப சுற்றுலாவாக வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு நேற்று புறப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபுசங்கர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, சுற்றுலா வாகனத்தை அனுப்பி வைத்தார்.
உடன், சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களும் சென்றனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

