ADDED : டிச 25, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூண்டி ஒன்றியம் சீத்தஞ்சேரி கிராமத்தில், தி.மு.க., ஒன்றிய செயலர் பொன்னுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

