ADDED : ஜன 03, 2024 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இதில், காஞ்சிபுரம் மின்பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் சுனில்குமார் பங்கேற்கிறார். திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் பகுதியில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவித்து மனுக்கள் கொடுக்கலாம் என, மேற்பார்வை பொறியாளர் கனகராஜன் தெரிவித்துள்ளார்.